ஒரு விளக்கம்









ஐயன்மீர்,

’உயிர்மை’ இதழில் திரைப்பட விமர்சனம் எழுதுவது, நானில்லை. இதுவரை எந்தவொரு திரைப்படத்துக்கும் நான் விமர்சனம் எழுதியதில்லை. இனிவரும் காலங்களில் எழுதப்போகும் திட்டமும் இல்லை. ’உயிர்மை’யிலும், இணையத்திலும் திரைப்பட விமர்சனங்கள் எழுதிவரும் திரு. சுரேஷ்கண்ணன் அவர்களை, சமூக வலைத்தளங்களில் பலர் ‘சுகா’ என்று விளிப்பதால், இந்த குழப்பம் வலுவடைந்ததாக சில நண்பர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். அதற்கு நான் ஒன்றும் சொல்லவோ, செய்யவோ இயலாது. நான் ‘சுகா’. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

அன்புடன்
சுகா

பின்குறிப்பு:
ஃபேஸ்புக்கிலும் நான் இல்லை.

Labels: , , , ,